எங்களுக்கு இலவச பட்டா அரசு வழங்கியது. ஆனால் இது வரை இடம் ஒதுக்கித்தரவில்லை

தூத்துக்குடி ; தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர்-யிடம்  செய்துங்க நல்லூர் மக்கள் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது… நாங்கள் மிகவும்     பின் தங்கிய மக்கள் , எங்களுக்கு இலவச பட்டா அரசு வழங்கியது. ஆனால் இது வரை இடம் ஒதுக்கித்தரவில்லை என்று 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனுவாக வழங்கி  உள்ளனர்.

இந்நிகழ்வில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மாரிஸ்வரி  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருங்குளம் ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி ஆகியோர் தலைமையில் அம்மக்கள் வந்தனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment