இர்மா புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த துயரமான சூழ்நிலையில் இருந்து புளோரிடா மக்கள் மீண்டும் வர தேவையான அனைத்து உதவிகளும் 100 சதவீத செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் நிவாரணப்பணிகளில் அமெரிக்கா ராணுவம் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. உணவு மற்றும் குடிநீர் படகுகளில் கொண்டுவரப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இர்மா புயலின் கோரத்தாண்டவத்திற்கு புளோரிடாவில் 81 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.