புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்து 16 நாட்கள் ஆகியும் இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் தினகரன் தலைமையில் 10 பேர் அவரை சந்திக்க உள்ளனர்.
ஆளுநரை சந்திக்கும்போது என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தினகரன் இல்லத்தில் அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது.
ஆளுநரை சந்தித்த பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் புதுச்சேரிக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த 16 நாட்களாக புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக முதல் முறையாக சென்னைக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
author avatar
Dinasuvadu desk

Leave a Comment