ஸ்ரீவைகுண்டம் அருகில் குடிநீர் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம்   முழுவதும் கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தவிர, நிலத்தடி நீர் மட்டமும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.  இந்நிலையில், தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் தனியார் அனல்மின் நிலையங்கள், ஆறுமுகநேரியில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல் ஆலை ஆகியவற்றுக்கு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் முறைகேடாக உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் போலீஸாரின் உத்தரவை மீறி ஆட்சியர் அறையை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இன்று மாலை பொன்னன்குறிச்சி பகுதியில் 18 லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர். 
author avatar
Castro Murugan

Leave a Comment