வாட்ஸ்அப் தற்போது இந்தியாவில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பணம் அனுப்புவதற்கு மிகப்பெரிய வசதியை செய்யும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் பணம் அனுப்பும் வசதி காணப்பட்டது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
வாட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தும் பட்சத்தில் வங்கிக் கணக்கோடு இணைந்திருக்கும் மொபைல் எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.வாட்ஸ்அப் சேவை மூலம் பணம் அனுப்பும் சேவையை அதிக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.