ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அரசு முடிவு – மத்திய அமைச்சர்

டெல்லி: ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை விரைவில் தொடங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். ஆன்லைனில் ஆர்டர் செய்தால், வீடு தேடி பெட்ரோல், டீசல் வரும். அதற்கான சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment