விருதுநகரில் வெடி விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி செய்ய பணியாளர்கள் வேலைக்கு வரவிருந்த நிலையில், அவர்கள் பட்டாசு தயாரிக்க தேவையான பொருட்களை ஒரு தொழிலாளி மட்டும் தயார் செய்து வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இன்று தேர்தல்..!

அப்போது பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மருந்துகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு  துறை விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.