பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தல்..!

வருகின்ற 21-ம் தேதி மகராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24 -ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக  அனைத்து கட்சிகளும் அறிக்கைகள் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி நாட்டா வெளியிட்டார். அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில்  மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதாகவும் , மகாராஷ்டிர மாநிலத்தை வறட்சியில் இருந்து காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினர்.
மேலும் ஜோதிபா பூலே , சாவித்திரிபாய் பூலே மற்றும் சாவர்க்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.

author avatar
murugan