பாஜகவும்,ஊழலும் பிரிக்க முடியாதவை – ஜோதிமணி எம்.பி

அண்ணாமலையின் 5 லட்ச ரூபாய் கடிகாரம்,மோடியின் 10 லட்ச ரூபாய் கோட் இவை எல்லாம் எளிமை,நேர்மையின் அடையாளம் என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

அண்ணாமலையின் 5 லட்ச ரூபாய் கடிகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இதுகுறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘அண்ணாமலையின் 5 லட்ச ரூபாய் கடிகாரம்,மோடியின் 10 லட்ச ரூபாய் கோட் இவை எல்லாம் எளிமை,நேர்மையின் அடையாளம்! ஆட்டுக்குட்டி மற்றும் டீ விற்று சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை 🙂 பாஜகவும்,ஊழலும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு தேசபக்தி ஊழலை மறைக்க உச்சரிக்கும் ஒரு வார்த்தை மட்டுமே’ என பதிவிட்டுள்ளார்.

annamalai - jothimani

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment