biggboss 3: உண்மையா சொல்லு, இல்ல சொன்னதை செய்! அபிராமியின் கடைசி நிமிடங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மைய சொல்லு, இல்ல சொன்னதை செய் என்ற டாஸ்க்  கொடுக்கப்படுகிறது.இதில் நடுவில் ஒரு பாட்டில் சுற்றிவிடப்படுகிறது. அந்த பாட்டில் அபிராமிக்கு நேராக வந்து நிற்கிறது.

இதனையடுத்து, தர்சன், அபிராமியிடம் இதுதான் உன் நீ ஏவிட் ஆகி வெளியே போக வேண்டிய லாஸ்ட் தேதி, அப்பா நீ கவினிடம் என்ன சொல்லுவாய் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த அபிராமி, உன் கூடவே வெளிய வரணும்னு நெனச்சேன் அது நடக்கல, ஐ ரியலி ரியலி லவ் யு, கண்டிப்பா நீ வின் பண்ணிட்டு வெளிய வரணும். வெளிய போன இது மாறிடும்னு நெனைக்க வேண்டாம். நன் அப்பிடியே தான் இருப்பேன்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.