biggboss 3: நீ நீயா இரு! நான் நானா இருக்கேன்! சாண்டியை வம்பிற்கு இழுக்கும் வனிதா!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், சாண்டி, கவின் மற்றும் லொஸ்லியாவை நாமினேட் செய்துள்ளார். நாமினேட் செய்தவுடன் கவினை கட்டிப்பிடித்து அழுகிறார். அதற்கு வனிதா, விளையாட்டை விளையாட்டாக எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் அழுதால், வெளியில் உள்ளவர்கள், உங்களை பார்த்து சிரிக்க போகிறார்கள் என கூறுகிறார்.

இதனால், கோபமடைந்த சாண்டி, வனிதாவிடம் நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன் எனக் கூறுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.