BIGG BOSS 5 : யாரு வேணா அடிச்சிட்டு சாவுங்க…., நிரூப் வெளிய போ…!

யாரு வேணா அடிச்சிட்டு சாவுங்க என பஸ் டாஸ்கின் பொழுது ப்ரியங்கா கூறியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி போட்டியாளர்கள் பஸ்சுக்குள் இருக்க வேண்டும். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தடங்கல்கள் கொடுக்கப்படுகிறது. அப்பொழுது ஒவ்வொருவராக இறங்க வேண்டும். அந்த வகையில் யார் வேண்டுமானாலும் அடிச்சிக்கிட்டு சாவுங்க, ஆனால் நான் இறங்கமாட்டேன் என பிரியங்கா கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

author avatar
Rebekal