சொந்த நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்.. காரணம் இதுதான்..!!

12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12 ஆம் தேதி மோதியது. இந்த போட்டியில், கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்யும் போது அவர் அடித்த பந்தை ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அப்போது அவரின் விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால்  நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்றும் அணியுடன் இருந்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவார் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் அவர் இடது விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த முறிவு ஏற்பட்டதன் காரணமாக அவரால் 12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார். அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வர் என்று கூறப்படுகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.