பிரதமர் மோடிக்கு மாம்பழ பரிசளித்த வங்காளதேச பிரதமர்..!

பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறந்த மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் வங்கதேசத்தின் நட்புறவின் அடையாளமாக மாம்பழங்களை வங்கதேச பிரதமர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மற்ற தலைவர்கள் என 2,600 கிலோ மாம்பழங்கள் 260 பெட்டிகளில் சரக்கு வாகனம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை கொல்காத்தாவில் உள்ள வங்கதேசத்தின் துணை தூதரகத்தின் முதன்மை செயலாளர் முகமது சமியுல் காதர் பெற்றுக்கொண்டார். இதனை இவர் தலைவர்களுக்கு பரிசாக அளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.