இந்தியாவுடன் முத்தரப்பு  டி20 இறுதிப்போட்டியில் யார்? சிங்கமா?புலியா?

முத்தரப்பு  டி20 போட்டியில்  இன்று கொழும்பு  பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் போட்டி  நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மூன்றவது போட்டி இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் வங்காளதேச அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி.

நான்காவது போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது.இந்திய அணி அந்த போட்டியில்  6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்நிலையில் வங்காளதேச – இலங்கை அணிகள் மோதும் ஆறாவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment