இந்த ஆண்டு காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கோலாகலமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவ காரணமாக காதலர் தின கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுமா என சில இடங்களில் சந்தேகமான சூழ்நிலை இருந்தாலும் இலங்கையில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மற்றும் அதற்கான கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அவர்கள், சுகாதாரத் துறையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்படக் கூடிய காதலர் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…