இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிறப்பிப்பு…!

உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசரநிலையை பிறப்பித்துள்ளார். இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் சற்று சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வருடமாக கொரோனா பரவல் காரணமாக நாட்டின் வருவாய் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அன்னிய செலவாணி இருப்பு குறைந்து, இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் … Read more

இலங்கைக்கு 740 கோடி கடன் வழங்கிய இந்தியா – எதற்காக தெரியுமா?

இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்தியா 740 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது. இலங்கை அரசு 2030- ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வழியாக உற்பத்தி செய்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் விதமாக சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இலங்கைக்கு சுமார் 740 கோடி கடன் உதவியாக வழங்கியுள்ளது. இந்த … Read more

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த 24 பேர் கைது!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல மதுரையில் வந்து தங்கியிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிங்களவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு செல்வதற்காக கள்ளப்படகின் மூலமாக தூத்துக்குடி வழியே வந்து மதுரையில் தங்கியிருந்த இரண்டு சிங்களர்கள் உட்பட 23 இலங்கையை சேர்ந்த நபர்களும், ஏஜன்ட் ஒருவரும் என 24 பேர் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை கப்பலூரில் வீடு எடுத்து சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்தவர்கள் கடந்த பத்து நாட்கள் தங்கி … Read more

இலங்கையில் தொடரும் கனமழை – 2.71 லட்சம் பேர் பாதிப்பு; 17 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இலங்கையிலுள்ள கம்பா, இரத்தினபுரா, கொழும்பு, பட்டாளம் உள்ளிட்ட பத்துக்கும்  மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அங்கு உள்ள  களனி, தெதரு, களு உள்ளிட்ட சில ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் … Read more

இலங்கையில் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கன மழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலின் அருகில் இருக்கக்கூடிய தீவு நாடாகிய இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலை பகுதிகள் அனைத்தும் … Read more

இலங்கையில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இலங்கையில் வருகின்ற 28-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது ஜூன் 7-ஆம் தேதி வரையும் இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தீவு நாடான இலங்கையிலும் தினமும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த … Read more

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் கொரோனா தாக்கும் பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில சிறிய அளவிலான நாடுகள் அல்லது தீவுகளில் வசிக்கக்கூடியவர்கள் குறைந்த அளவிலான மக்கள் தொகை கொண்டிருப்பதால் கொரோனாவின் தாக்கம் அங்கு சற்று குறைவாக காணப்படுகிறது. ஆனால், 2.1 கோடி மக்கள் தொகை … Read more

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அரசு!

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சீரம் நிறுவனத்தின் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கை அரசு பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் நன்கொடையாகவும் விநியோகிக்கப்பட்டும் வருகிறது. இந்த தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு குறிப்பிட்ட அளவு இந்தியாவால் அனுப்பப்பட்டு இருந்தது. இது முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு … Read more

ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து வாங்கும் இலங்கை!

இந்தியாவிடமிருந்து இலங்கை ஒரு கோடி கொரோனா  தடுப்பூசிகளை வாங்குவதற்கு சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவின் வீரியத்தை குறைப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்படவும் செய்கிறது, நன்கொடையாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே … Read more

காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிப்பு – எங்கு தெரியுமா?

இந்த ஆண்டு காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கோலாகலமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவ காரணமாக காதலர் தின கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுமா என சில இடங்களில் … Read more