பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்!

யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் நேரலையில் பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்து வந்த மதன் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பியதுடன் மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைமில் மதன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மதன் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது மற்றும் தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மதனின் இந்த தவறான செயலுக்கு உடந்தையாக அவரது மனைவி கிருத்திகாவும் இருந்ததால் கடந்த ஜூன் 16 ஆம் தேதி மதன் மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டார்.
அதன் பின் தலைமறைவாக இருந்த மதன் ஜூன் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த மதனின் மனைவிக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது. மதனின் மனைவிக்கு 8 மாத கைக்குழந்தை இருப்பதால் தற்பொழுது கிருத்திகாவுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
author avatar
Rebekal