கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய தியாகராஜன்,பிரசாந்த்.!

கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்தனர்.  

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றார்கள். அந்த வகையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை மற்றும் நடிகருமான தியாகராஜன்  தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சந்தித்து 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தியாகராஜன், ” முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அவரது செயல்பாடுகளை பார்க்கும்போது கருணாநிதியை பார்ப்பது போல் உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.