ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

ஆயுத பூஜை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 30, அக்டோபர் 1-ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கோயம்பேடு உள்ளிட்ட மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும் சென்னை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment