அருமை…எனது குப்பை;எனது பொறுப்பு திட்டம் – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்கள் பொது இடங்களில் குப்பையை வீச வேண்டாம். மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பை,மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நம்மை சுற்றி இருக்கும் பகுதியை நாம் தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் குப்பை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,எனது குப்பை – எனது பொறுப்பு என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.அதன்படி,  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment