#Breaking : அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு.!

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதியம் முதல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, வழக்கை நாளை … Read more

திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுகிறார்.! இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றசாட்டு.!

ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்.  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதியம் முதல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.  இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘ஓ.பன்னீர்செல்வம் … Read more

டெல்லியில் பயங்கரம்.! தன்னுடன் பேச மறுத்த இளம்பெண்ணை கத்தியால் பல முறை குத்திய நபர்.!

டெல்லியில் தன்னுடன் பேச மறுத்த பெண்ணை கத்தியால் ஒரு நபர் பலமுறை குத்தியுள்ளார்.  தலைநகர் டெல்லியில் ஆதர்ஷ் நகரில் கடந்த திங்கள்கிழமை அன்று 21 வயது பெண் ஒருவரை சுக்விந்தர் சிங் எனும் நபர் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த பெண் சுக்விந்தர் சிங்கிடம் பேச மறுத்ததாகவும், அதன் காரணமாக அந்த பெண்ணை பலமுறை குத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  … Read more

கொலை வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் ஹோட்டல் இடிப்பு.!

கொலை வழக்கில் சம்பந்தமான பாஜக மூத்த தலைவர் மிஸ்ரி சந்த் குப்தாவின் ஹோட்டல் இன்று இடிக்கப்பட்டது.  மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் கார் ஏற்றி ஒருவரைக் கொன்றதாக பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் மிஸ்ரி சந்த் குப்தா உள்ளிட்ட 7 பேர் மீது மத்திய பிரதேச மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில்,  மிஸ்ரி … Read more

15 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் புதிய முதலீடுகள்.. வேலைவாய்ப்புகள்.! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.!

தமிழகத்தில் 15,610.43 கோடி செலவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது. – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.  இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அடுத்த வாரம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 15,610.43 கோடி செலவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க … Read more

#Breaking : ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா உயிரிழப்பு.!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.   காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனும்,  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா தற்போது உயிரிழந்துவிட்டார். 46 வயதே ஆன திருமகன் ஈவெரா  மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனையா.? இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம்.!

ரொனால்டோ புதியதாக இணைந்த சவூதி அரேபியாவின் அல்-நாஸர் கிளப் அணிக்காக, அணியில் சேருவதற்கு முன்பு வழக்கமாக செய்யும் மருத்துவ பரிசோதனை புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.  போர்ச்சுகீசிய கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டது போல ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. ரொனால்டோவின் புகைபடம் பார்த்த ரசிகர்கள் சிலர், ‘ ரொனால்டோவுக்கு  மருத்துவ சிகிச்சை நடைபெறுகிறதா.?’ என கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில், ரொனால்டோ புதியதாக இணைந்த … Read more

டெல்லி வீதியில் தாறுமாறாய் கார் ஒட்டிய காவல் அதிகாரி.! போதையில் விபத்து நடந்ததா.?

டெல்லியில் துவாரகா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரின் கார் பல வாகனங்களை இடித்து சேதப்படுத்தியுள்ளது.  டெல்லியில் துவாரகா பகுதியில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மற்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது. மேலும், காவல் கட்டுப்பாடு வாகனத்தையும் அந்த கார் இடித்து சேதப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.  இந்த விபத்தை ஏற்படுத்தியது டெல்லி காவல் துறை உதவி சப்-இன்ஸ்பெக்டர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. … Read more

பெங்களூரு விமான நிலையத்தில் பெண்ணின் சட்டையை கழட்ட சொன்ன ஊழியர்கள்.? வருத்தம் தெரிவித்த நிர்வாகம்.!

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு பெண்ணின் சட்டையை கழற்ற சொன்ன விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.  பெங்களூரூ விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமாக நடைபெறும் பாதுகாப்புச் சோதனையின் போது அங்கு வந்திருந்த ஒரு பெண்ணின் சட்டையை கழற்ற சொன்னதாக சம்பந்தப்பட்ட அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண் கூறுகையில், ‘அங்கே (விமான நிலையத்தில்) நிற்பது உண்மையில் அவமானமாக இருந்தது. வெறும் உள்சட்டை அணிந்து, ஒரு பெண்ணாக நாங்கள்  விரும்பாத கவனத்தைப் பெற்றேன். ‘ என பெண் பயணி … Read more

18 வயது வரையில் கணக்கு பாடம் கட்டாயம்.! இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய முடிவு.!

18 வயது வரை அனைவரும் கணக்கு பாடத்தை கட்டாயமாக கற்க வேண்டும் என்கிற திட்டத்தை ரிஷி சுனக் விரைவில் இங்கிலாந்தில் அமல்படுத்துவார் என கூறப்படுகிறது.  இங்கிலாந்தில் அண்மையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார். அவர் தற்போது இங்கிலாந்து குழந்தைகளின் கல்வி நலனுக்காக புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இங்கிலாந்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் 18 வயது வரை கணக்கு பாடத்தை கட்டாயமாக கற்க வேண்டும் என்கிற திட்டத்தை ரிஷி … Read more