கிரிக்கெட் வீரர்களுக்கு குடிநீர் கொடுத்த ஆஸ்திரேலிய பிரதமர் !

நேற்று நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய பிரதமர் xi அணியும் இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய பிரதமர் xi அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், இப்போட்டியை காண வந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் அவர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் வழங்கியுள்ளார். இதன் பின் அவர் கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெறிவித்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதற்காக அனைவரும் ஆஸ்திரேலியா பிரதமரை வாழ்த்தியுள்ளனர்.

author avatar
Vidhusan