ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர முயற்சி -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர்  சின்பிங் சந்திப்பு நடைபெற்றது.வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இது கருத்தப்பட்டது.இதேபோன்று இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ருசீகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது  பிரதமர் நரேந்திர மோடியை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.