அதிபர் பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் கைது.
நியூயார்க்கில் மிசூரி மாகாணத்தில் வசித்து வருபவர் சாய் வர்ஷித். இவர் அவர் பாதுகாப்பு தடுப்புகளை மீறி வெள்ளை மாளிகையின் உள்ளே வாகனத்தைச் செலுத்த முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதிபர் பைடனை கொலை செய்யப் போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது அதிபர், துணை அதிபரை கடத்திக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.