ப.சிதம்பரத்தை சட்டரீதியில் வெளியே கொண்டு வருவதற்கு முயற்சி- கார்த்தி சிதம்பரம்

சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி  உறுதுணையாக இருக்கும் என்று சோனியாகாந்தி உறுதி தெரிவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முழு உறுதுணையாக இருக்கும் என்று சோனியாகாந்தி உறுதி அளித்துள்ளார்.

நான் எப்படி அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் கைது செய்யப்பட்டேனோ அதே போன்று ப.சிதம்பரமும் கைது செய்யப்பட்டுள்ளார்.ப.சிதம்பரத்தை சட்டரீதியில் வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.