திருப்பதியில் ரூ. 19.16 லட்சம் மதிப்பிலான நகை காணவில்லை ..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் அனைத்தும் திருப்பதி கோவிலில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டு  பாதுகாத்து வருகின்றனர்.

கோவிலில் உள்ள கருவூலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.19.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநில ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலர் பானு பிரகாஷ் கூறுகையில், வெள்ளி , தங்கம் நெக்லஸ் போன்றவை  காணவில்லை என கூறியுள்ளார். இதற்கு திருப்பதி தேவஸ்தானம் பதில் அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையில் புகார் கொடுக்காமல் ஒரு நபர்  மீது பழி சுமத்தி தப்பிப்பது நியாயமில்லை என கூறினார். அந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

author avatar
murugan