நாள் முடிவில் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்.! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.!

இந்திய பொருளாதாரம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இதில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 200 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமானது.

வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் பலவீனம், தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போரும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணமாக உள்ளது.

முதலீட்டாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றமடைந்து வர்த்தகத்தைத் தொடங்கியது. அதன்படி, காலை 9.30 மணிக்குப் பிறகு சென்செக்ஸ் 525.75 புள்ளிகள் உயர்ந்து 64,117.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 140.05 புள்ளிகள் உயர்ந்து 19,129.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வந்தது.

தற்போது வர்த்தக நாள் முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் 489.57 புள்ளிகள் உயர்ந்து, 64,080.90 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, நிஃப்டி 144.10 புள்ளிகள் உயர்ந்து 19,133.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 63,591.33  புள்ளிகளாவும், நிஃப்டி 18,989.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.0100 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 87.42 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 10 அல்லது 0.15% குறைந்து ரூ.6,772 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் உள்ளது. இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.