ஒரு கட்டத்தில் நக்சலைட் ஆகிவிடலாம் என்று எண்ணினேன் – துரை வைகோ

அப்பாவின் பெலவீனம் மற்றும் இயக்க தோழர்களின் வற்புறுத்தலால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என துறை வைகோ பேச்சு. 

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துறை வைகோ கோவையில் ஒரு நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு 3 வருடத்திற்குமுன்னதாக நான் அரசியலுக்கு வருவேன் என யாரவது சொல்லியிருந்தாலும், நானும் எனது அப்பாவும் அவர்களை பைத்தியக்காரன் என்று தான் சொல்லியிருப்போம்.

ஏன்னென்றால் எனக்கு அரசியல், அரசியல்வாதிகள் யாரையும் பிடிக்காது. அதிகார வர்க்கத்தினரை அனைவரையும் எதிர்த்தவன் நான். ஒரு கட்டத்தில் நக்சலைட் ஆகிவிடலாம் என்று கூட எண்ணினேன். அப்பாவின் பெலவீனம் மற்றும் இயக்க தோழர்களின் வற்புறுத்தலால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment