அஷ்வினிக்கு ஆதரவாக குரல் ஜி.வி.பிரகாஷ்!பெண்ணினத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி போகிறது ……

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ், சென்னையில் நேற்று காதல் விவகாரம் தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஷ்வினிக்கு ஆதரவாக  குரல் கொடுத்துள்ளார்.

பி.காம் முதலாமாண்டு சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் படித்து வரும் அஸ்வினி நேற்று அழகேசன் என்பவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அழகேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர செயல் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ், காதல் எனும் பேரில் நடைபெற்ற கொடூர செயல்… விசாரணை என்ற பெயரில் தண்டனைகள் தாமதப்படுவது குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகுவதோடு பெண்ணினத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி போகிறது என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment