#BREAKING: உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பாணை ரத்து!

உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணை ரத்து என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2,331 உதவி பேராசிரியர்களை நியமிப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்தானது.

4000 உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக 4 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அரசாணை வெளியானதை தொடர்ந்து முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment