ஆசியக் கோப்பை 2018:ஆப்கான் அணி இந்திய அணிக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயம் ..!ஷேசாத்,நபி அதிரடி ஆட்டம் ..!

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி  252 ரன்கள் அடித்துள்ளது.

இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை  இழந்து 252 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அப்டாப்  2 ,ரஷீத் 12 ரன்களுடனும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத்  124,முகமது நபி 62 ரன்கள் அடித்தார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகள்,குலதீப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.இதையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Leave a Comment