இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 252 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அப்டாப் 2 ,ரஷீத் 12 ரன்களுடனும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத் 124,முகமது நபி 62 ரன்கள் அடித்தார்கள்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகள்,குலதீப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.இதையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.