கொரோனா வைரஸ் காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

சமீப காலமாக  கொரோனா என்ற கொடுமையான நோய் உலகையே  அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காவு வாங்கியது.  இந்த நோய் தற்போது கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நோய் சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பல திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் பீதியால் மார்ச் 18ல் வங்கதேசத்தில் நடக்கவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.