#BREAKING: நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் -பிரதமர் மோடி.!

லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய மோடி, நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என  கூறினார்.

மேலும், ராணுவ வீரர்கள் மீது மகத்தான நம்பிக்கை உள்ளது. மொத்த நாடும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஒரே சமயத்தில் பல முனைக்களுக்கு செல்லக் கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது. நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும். எல்லைப் பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகளால் ரோந்து  திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முப்படைக்கு  தேவையான போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

author avatar
murugan