#BrekingNews : இந்திய சீன இராணுவங்களுக்கு இடையே மோதல் ! இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

எல்லையில் அத்துமீறிய சீனப்படைகள் வெளியேறும்போது இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன இடையே நீண்ட நாட்கள் பதற்றம் நிலவி வருகிறது. எனவே இது தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . இந்நிலையில், லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர்.

பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லை தொடர்பாக இந்திய – சீனா இடையே  பேச்சுவரத்தை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.