பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் அரசு தப்புமா..? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!

இதில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஹேமந்த் சோரன் கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி மக்களவை எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் இன்று பேசுகிறார்.

இதனால், மக்களவைக்கு இன்று அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் இந்த அமர்வு எதிர்ப்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. மேலும், இன்று மக்களவையில் 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து விரிவாக பிரதமர் பேசுவார் என்றும்  எதிர்க்கட்சிகள் குறித்தும் விமர்சனம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment