சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது என நடிகைகள் அண்மை காலமாக வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதிலும்.நடிகை ஸ்ரீரெட்டி ஒரு பட்டியல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என குறிப்பிட்டார்.
தற்போது பிரேமம் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது பாலியல் தொந்தரவு பற்றி கூறியுள்ளார்.
அதில் சினிமாவில் பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், தனக்கு அது இதுவரை நடந்தது இல்லை என்றும், புதிதாக நடிக்க வருபவர்களுக்கு இதுபோன்ற தொந்தரவுகள் தரப்படுகின்றன என்றும், இதனை நடிகைகள் தவிர்பதுதான் நல்லது இதுதான் தடுப்பதற்கு எனக்கு தெரிந்த வழி என்றும் குறகப்பிட்டார்.
மேலும் நடிகைகள் குட்டை பாவாடை அணிந்தால் மட்டும் ஜெயித்துவிட முடியாது. தங்களது நடிப்பின் மூலம் மட்டுமே சினிமாவில் நல்ல நிலமை எட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU