தமிழ் சினிமாவுக்காக காத்திருக்கும் அனுபமா! சைரன் படத்தில் நடித்த முக்கிய காரணம்?

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுபமா. இவருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பல வெற்றி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தார். பிறகு தமிழில் தனுஷிற்கு ஜோடியாக கொடி அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளி போகாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

பிறகு பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை சமீபகாலமாக மலையாளத்திலும் அனுபமாவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் எந்த படங்கள் கிடைத்தாலும் சரி அதில் நடிப்போம் என்ற மனநிலைக்கு அனுபமா வந்துவிட்டாராம். மலையாளத்தில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தமிழ் சினிமாவிற்கு திரும்பி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷை பங்கமாக கலாய்த்த ஜெயம் ரவி! வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் அவர் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக சைரன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆனால், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா தான் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அனுபமா வரும் காட்சிகள் மிகவும் குறைவாக தான் இருக்குமாம் பெரிய அளவில் அவருக்கு காட்சி இடம்பெறவில்லையாம். ஆனாலும், அவர் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணமே தமிழ் படத்தில் நடித்தால் தனக்கு அடுத்ததாக தமிழ் படங்களிலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தானாம் .

படத்தில் தனது காட்சிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை தனக்கு பட வாய்ப்புகள் வேண்டும் என்று சைரன் படத்தையும் தமிழ் சினிமாவையும் ஆவலுடன் வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார் அனுபமா. மேலும் சைரன் திரைப்படம் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment