“அறநிலையத்துறை கேள்விகளுக்கு இன்று மாலை பதில்” – தீட்சிதர்கள் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து,இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு சற்று முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கு விவகாரங்கள் தொடர்பான அறநிலையத்துறையின் கேள்விகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு வழக்கறிஞர்கள் மூலமாக பதில் தரப்படும் என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Comment