அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டாரு அண்ணாமலை – சீமான்

இரண்டு வருடத்தில் பாஜகவினர் அண்ணாமலையை விரட்டி விடுவார்கள் என சீமான் பேச்சு. 

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுகவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய், ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் மோடி எட்டு ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணாமலை அவர்கள் அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு வந்து விட்டார். இரண்டு வருடத்தில் பாஜகவினர் அண்ணாமலையை விரட்டி விடுவார்கள். அண்ணாமலையிடம் தயவு செய்து கேட்கிறேன் எச்.ராஜாவுக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கி கொடுத்து விடுங்கள்.  காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்கி எச் ராஜாவிற்கு நான் சிபாரிசு செய்கிறேன் என்று விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment