ரஷ்ய கடலில் கப்பல் தீப்பிடித்து விபத்துக்களானதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
ரஷ்யா நாட்டின் கடல்பகுதியில் எரிபொருள் கொண்டு சென்ற கப்பல் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து ரஷ்ய நாட்டின் மீட்பு படை கொடுத்த தகவலின் படி இரண்டு கப்பல்களும் நடுக்கடலில் எரிபொருளை மாற்றம் செய்யும் போது இந்த விபத்து ஏற்படத்தாக தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பு பணியில் ஈடுபட மிகவும் சிரமமாக உள்ளது. காரணம்.விபத்து நடைபெற்றுள்ள கடல்பகுதியில் மோசமான வானிலை உள்ளதென்று மீட்பு பணியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.