தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுங்கயில், தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது. திமுகவும் அதிமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன .தமிழக மக்கள் எந்த வகையிலும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். மத்திய அரசு முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.