அமித்ஷா வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்-எல்.முருகன்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  21 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பா.ஜ.க.விற்கு உத்வேகத்தை அளிக்கும்.

அமித்ஷா, முதலமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், அமித்ஷாவின் வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வேல் யாத்திரையை தொடர்வோம் என எல்.முருகன் அறிவித்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment