அச்சத்தின் உச்சியில் அமெரிக்கா! மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய அமெரிக்கா!

அமெரிக்காவில் மீண்டும் உயர்ந்த பலி எண்ணிக்கை. அச்சத்தின் உச்சியில் அமெரிக்க மக்கள்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. உலக அளவில் 3,138,413  பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 217,985 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் முழுவதும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பலி எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று இந்த கொரோனா வைரஸால் 2,470 பேர் உயிரிழந்துள்ளனர். மீண்டும் உருளப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.