ஆம்புலன்ஸ் விபத்து – கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு. 

சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற நிலையில், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஆம்புலன்சில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் இருந்தனர்.

இந்த நிலையில், இந்த விபத்தில், கர்ப்பிணிப் பெண் நிவேதா மற்றும் தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment