ஐபிஎல் தொடரில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு..! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்று இறுதி போட்டி என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் நேரத்தில் அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றை அம்பத்தி ராயுடு பதிவிட்டுள்ளார்.

அதில் ஐபிஎல் தொடரில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அவர், குஜராத் மற்றும் சென்னை அணிகள் இரண்டுமே மிகச் சிறந்த அணிகள். இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். என்று தெரிவித்துள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.