அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் 3-ல் திறக்க வேண்டும்-பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற  செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில்,மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கி, கற்பித்தல் பணியை துவங்க வேண்டியிருப்பதால், அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் 3-ல் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment