நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 1000-க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் இந்த மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த  கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (ஏப்ரல் 15-ஆம் தேதி ) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.