ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க இயலாமல் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த அஜித்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் எப்போது வெளியானாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.

நடிகர் அஜித் எந்த இடத்திற்கு சென்றாலும், அந்த இடத்தில் அவரை காண ரசிகர்கள் கூட்டம் திரண்டு விடுவார். இந்நிலையில், இவர் தேர்தலில் வாக்களிக்க சென்ற போது, இவரை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளனர்.

இதனால், அங்கு மிகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அஜித் வரிசையில் நிற்காமல், போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகள் சென்று வாக்களித்து விட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து நடிகர் அஜித் அவர்கள் கூறுகையில், இப்படி ரசிகர்கள் தன் மேல் வெறியாக இருப்பதும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து, நடிகர் அஜித், அவர் நண்பரிடம் கூறுகையில், நான் சினிமாவில் நடிப்பதால் தானே இப்படி. நான் நடிப்பதையே நிறுத்தி விடுகிறேன் என்று கூறும் அளவிற்கு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment