ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சிபிஐ நீதிமன்றம்.

மத்திய நிதியமைச்சராக இருந்தபோது சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைக்கேடு நடந்ததாக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு  செய்தது.

இந்த வழக்கு தொடர்பான டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி சைனி தெரிவித்துள்ளார்.